சின்னாளப்பட்டி,பிப்.9- அகில இந்திய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி யில் தமிழ்நாடு பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகில இந்திய அளவிலான 15 -வது 17 வயதுக்குட்பட்ட வர்களுக்கான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி கர்நாடக மாநி லம் பெல்காமில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, மத்திய பிர தேசம், குஜராத், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தில்லி என 25 மாநில அணிகள் கலந்து கொண்டன. பல கட்டங் களாக நடைபெற்ற இந்த போட்டி யில் தமிழக பெண்கள் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி மகாராஷ்ரா அணியோடு மோதியது. இதில் தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றியது. இதே போல் ஆண்கள் பிரி விலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ராஜஸ்தான் அணியிடம் மோதியது இதில் ராஜஸ்தான் முதலிடத்தையும், தமிழ்நாடு ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதே போல் 17 வயதுக்கும் மேற்பட்ட சீனியர் பிரிவு போட்டி கள் கோவா மாநிலத்தில் நடை பெற்றது. இதில் பெண்கள் பிரிவு ராஜஸ்தானை வீழ்த்தி முதலி டத்தை பிடித்து சாம்பியன் பட் டத்தை வென்றது. ஆண்கள் அணி 3 ஆம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்,வீராங்க னைகளுக்கு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங் கில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரோல்பால் சர்வதேச நடுவர் பிரேம்நாத், பயிற்சியா ளர் ராஜசேகர் மற்றும் பெற்றோர் கள், பொதுமக்கள் வெற்றி பெற்ற வர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.