நாமக்கல், பிப்.2- குமாரபாளையம் ஜல் லிக்கட்டு போட்டியின் போது, தொண்டை பகுதி யில் காளை குத்தி இளை ஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனுர் பகுதியில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், சனியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது. 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவா சல் பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரின் 23 வயது மகன் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற வீரர் கலந்து கொண்டார். அப்போது, அவரின் தொண்டைப் பகுதியில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த அவ சர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட் டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி தாமஸ் ஆல்வா எடிசன் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இளைஞரின் தொண்டை பகுதியில் காளை முட்டிய நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் இணையத் தில் வேகமாக பரவி வருகிறது. குமாரபாளையம் ஜல்லிக் கட்டு பேரவை சார்பில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தா ருக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.