குடவாசல், மே 15- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் நெய்க்குப்பை ஊராட்சி கிராமத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 25 மாணவர்கள் மற்றும் நெய்க்குப்பை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூவருக்கும் அப்பள்ளியின் தலைமையாசி ரியர் உஷாராணி சுமார் ரூ.20,000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு பை வழங்கினார். நிகழ்ச்சிக்கு குடவாசல் வட்டார கல்வி அலுவலர் இளங்கோ வன், ஊராட்சி தலைவர் சத்தியா முருகு பாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சுதாகர், ஒன்றியக்குழு உறுப்பினர் மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் துர்கா பரமேஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் வளர்மதி, சமையலர்கள் ராஜலட்சுமி, சகுந்தலா, கல்வி குழு உறுப்பினர் அனுசுயா மற்றும் துப்புரவு பணியாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.