மேட்டுப்பாளையத்தில் வணிகர்கள் ஊர்வலம்
மே.பாளையம், நவ. 25- தெருவோர வியாபார தடை எதிர்ப்பு தினத்தையொட்டி மேட்டுப்பாளையத்தில் எதிர்ப்பு தின ஊர்வலம் நடை பெற்றது. தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் நகர வர்த்தக குழுவை செயல்படுத்த வேண்டும். தெருவோர வியாபா ரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபா ரம் ஒழுங்கமைப்பு சட்டம் 2014 ஐ தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். திருவிழா மற்றும் தெருவோர வியா பாரிகளுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு தனியாக வணிக வளாகம் ஏற்ப டுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேசிய சாலையோர சிறு வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் எதிர்ப்பு தின ஊர்வலம் மற்றும் விளக்கக் கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் உள்ள தனியார் திரையரங்கு பகுதியில் தொடங்கிய ஊர்வலம் ரயில் நிலையம் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாச்சி ராவ் சாலை வழியாக வந்து மேட்டுப்பாளை யம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஊர் வலத்தை தொடங்கி வைத்த தேசிய சாலையோர சிறு வியாபாரிகள் சம்மேளன சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஆர்.செவ்விளம்பருதி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். கோவை மண்டல அமைப்பாளர் புஷ்பராஜ், தாலுகா தலைவர் துரை, துணைத் தலைவர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.