மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் தெற்கு ஒன்றியம், அம்மாசிபாளையத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர் களுக்கு கடந்த 3 மாதங்களாக கூலி வழங்காததைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சம்பூரணம் தலைமையில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சி.துரைசாமி, செய லாளர் பி.சபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.