districts

img

குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

சேலம், செப்.13- எடப்பாடி அருகே குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையை யொட்டி அமைந்துள்ள வீரப்பம்பாளையம் பகுதியில், சாலை யோரங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி, தொலைத்தொ டர்பு கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத னால் அப்பகுதியில் பிரதான குடிநீர் குழாய்கள் சேதம டைந்த நிலையில், கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்பட வில்லை. குடிநீர் கிடைக்காததால் பெரும் அவதிக்குள்ளான அப்பகுதி பொதுமக்கள், குழாய்களை சீரமைத்து, உடனடி யாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வியாழனன்று எடப்பாடி - சங்க கிரி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் துறையினர், குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர், அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.