சென்னை,அக்.25- நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தாலும் அவை அகற்றப் பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 162 ஏக்கரில் இருந்த கோலடி ஏரி தற்போது 112 ஏக்கராக சுருங்கிவிட்டது என்று நீதிபதி கள் வேதனையுடன் தெரிவித்தனர். உரிய பட்டாக்களுடன் மக்கள் வீடு களை கட்டி வாழ்ந்து வருவதாகவும் அவர்களை கருத்துகளை கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க ப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்தது.