districts

img

தீண்டாமையை கடைப்பிடிக்கும் அதிகாரியை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 25 - தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை  உதவி கோட்ட பொறியாளர் இரா.கணே சமூர்த்தி ஆதிக்க சாதி குணத்துடன் நவீ னத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கி றார். மனித உரிமை மீறலில் ஈடுபடும்  அவரது இழிவான செயல் மீது அரசு நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டக் கண் காணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ராணி தலைமையில் வெள்ளியன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர்கள் அந்தோணி ஜெயராஜ், வைரமுத்து, புஷ்பவள்ளி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாலைப்  பணியாளர் சங்க கோட்டத் தலைவர்  ஆர்.கருப்பன், துணைத் தலைவர் கே. கருப்பன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.ராணி நன்றி கூறினார்.