districts

img

புதிய தாழ்தள பேருந்துகள் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

கோவை, அக். 25- கோவை, கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து பணி மனையில் புதிதாக 24 தாழ்தள பேருந்துகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளியன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கோவை மண்டலத்திற்கு 100 எண்ணிக்கையில் புதிய தாழ்தள சொகுசு  பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தாழ்தள சொகுசு  பேருந்துகளில் முதல் கட்டமாக 24 சொகுசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படு கிறது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டம் கருமத்தம் பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, இந்த  பேருந்துகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து  துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.