districts

img

தூய்மைப் பணியாளர் போனஸ்: அக்.29 இல் மீண்டும் பேச்சுவார்த்தை

திருப்பூர், அக். 25 - திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம்மா வட்டத்தில் உள்ள நகராட்சிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங் குவது குறித்து தொழிலாளர் உதவி ஆணை யர் முன்னிலையில் வெள்ளியன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில் கே.ரங்கராஜ், கே. உண்ணிகிருஷ்ணன், பி.பழனிச்சாமி ஆகி யோர் பங்கேற்று, இந்த தொழிலாளர்களுக்கு  சட்டப்படி 8.33 சதவிகிதத்திற்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத் தினர். மாநகராட்சி, நகராட்சிகள் சார்பில் பங் கேற்ற அதிகாரிகள், தொடர்புடைய ஒப்பந்த தாரர்களிடம் பேசி முடிவு சொல்வதாகக் கூறி னர். தொழிலாளர் உதவி ஆணையர் பிரேமா,  நிர்வாகங்கள் நியாயமான போனஸ் வழங்க  வேண்டும் என்று கூறியதுடன், மீண்டும் அக். 29 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார்.