districts

img

மார்ச் 9, 10ல் பெருந்திரள் முறையீட்டு போராட்டம்

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தீர்மானம்

சேலம், மார்ச் 7-  கல்வித்துறையில் உதவியாளரை நேரடியாக நியமிப்பதை கைவிடக் கோரி மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதி மாலை நேர பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங் கம் தீர்மானித்துள்ளது.   தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டம் சேலத்தில் மாநில தலை வர் சேகர் தலைமையில் நடைபெற் றது. இதில்  மாநில பொதுச்செயலா ளர் பொன்.ஜெயராம், பொருளாளர் வினோத்குமார், மாநில துணைத்தலை வர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழு நிலுவை தொகையை  வழங்க வேண்டும். நேரடி நியமன உத வியாளரை கல்வித் துறையில் கைவிட வேண்டும். நலத்திட்டங்களை செயல் படுத்த கூடுதல் பணியாளர்களை நிய மிக்க வேண்டும்.  பட்டம் பெற்ற ஆய்வக உதவியாளர் மற்றும் இள நிலை உதவியாளர் நேரடி நியமன உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க வேண்டும். அனைத்து வட்டார கல்வி அலுவல கத்திற்கு மாவட்ட கல்வி அலுவலகம் முதன்மை கல்வி அலுவலகம் இவற் றில் பணியாற்றும் நிர்வாக அலுவலர் தர விகிதம் 5400 என நிர்ணயித்து புதிய பணியிடம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் தேதி நடை பெறும் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது இக்கோரிக்கை களுக்கு அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதி மாலை  நேர பெருந்திரள் முறையீடு போராட் டம் நடத்துவது என திர்மானிக்கப் பட்டது.