தமிழகத்திலேயே முதன் முறையாக கோவையில் தனியார் பேருந்துகளில் க்யூஆர் கோடு மூலமாக பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து வடவள்ளி நோக்கி செல்லும் ஜெய்சக்தி என்ற பேருந்தின் உட்பகுதியில் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது. இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாக நாம் பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.
சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க க்யூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளதாக பேருந்தின் நடத்துநர் தீபக்குமார் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சில்லறை தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாக பேருந்தின் உரிமையாளரிடம் கூறினோம். இதனால் அவர் க்யூ ஆர் கோடு முறையை எங்கள் பேருந்தில் கொண்டு வந்தார். பயணி ஒருவர் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தியவுடன் அதனை எங்களுக்கு தெரிவிக்கும் படி எங்களது செல்போனில் செயலி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 5 பேருந்துகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.