districts

img

தோழர்கள் யெச்சூரி, தங்கவேல் ஆகியோருக்கு மலரஞ்சலி

திருப்பூர், செப்.13- தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு மற்றும் தோழர் கே.தங்கவேல் 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர்களின் உரு வப்படங்களுக்கு மலர் தூவி செவ்வஞ் சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரு மான தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று அனு சரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத் தில் வைக்கப்பட்டிருந்த தோழர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி செவ் வஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ் வில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னிகிருஷ்ணன், ஜி.சாவித்திரி, எஸ்.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன், வடக்கு மாந கரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, வை.ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.