districts

img

வரதட்சணை மோசடி வழக்கு: பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்ததிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வரதட்சணை மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்ததிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த சாவடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரசாமி. இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுந்தரசாமி ஒன்றரை ஏக்கர் நிலம், 60 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் வீட்டு உபயோக பொருள்களை சீதனமாக கொடுத்திருந்த நிலையில், திருமணம் முடிந்த சில மாதங்களில் ஞான சௌந்தரி கருத்துவேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணத்திற்காக கொடுத்த சீர்வரிசை பொருட்களை, தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கோரி, சுந்தரசாமி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில், பல வாய்தாக்களில் ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி ஆகியோர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு இன்று கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையிலும் பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை.

இதைதொடர்ந்து இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இருவரையும்

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ரகுமான் உத்திரவிட்டுள்ளார்.