கிருஷ்ணகிரி ஜுன் 6- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நகரில் சிறுமழை பெய்தாலும் மழை நீரும் கழிவு நீரும் கலந்து சாலைகளில் தேங்கி நிற்கி றது. சனிக்கிழமை பெய்த மழையில் நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி யளிக்கிறது, கடந்த 10 ஆண்டுகளுக் கும் மேலாக கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்காததால் சிறு மழை பெய்தால் கூட சாலைகளில் 2 அடிக்கு மேல் கழிவு நீரும், மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பர வும் அபாயம் உள்ளது. மேலும் இதிலிருந்து துர் நாற்றம் வீசுகிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்வதும், இரு சக்கர, நான்கு சக்கர வாக னங்ககளில் பயனிப்பதும் கூட சிரமமாக உள்ளது. அவ்வப்போது விபத்து களும் நடைபெறுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வா கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உட னடியாக பேரூராட்சி நிர்வா கம் கழிவு நீர் கால்வாய் களை தூர்வாரி சீரமைக்க வேண்டும், அனைத்து சாலைகளையும் விரைந்து செப்பனிட வேண்டும். பேரூ ராட்சி வளர்ச்சிக்கேற்ப தூய்மை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.