நாமக்கல், அக். 20- ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தில் இருந்து ராசிபுரம் பேருந்து நிறுத்தம் வரும் பிரதான சாலையில் சேரும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், புதுப்பாளையத்தில் இருந்து ராசி புரம் பேருந்து நிலையம் வரும் முக்கிய சாலையாக உள்ளது. இப்பகுதியில் அரசு பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் சட்ட மன்ற அலுவலகம் செல்லும் சாலையாக உள்ளது. கடந்த மூன்று வருட காலமாகவே சாலை பராமரிப்பு பணிகளுக் காக தோண்டப்பட்டு முழுமையாக சாலைகள் அமைக்காத தால் மழை காலங்களில் இப்பகுதி மக்கள் சாலையைக் கடப்பது மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் இவ்வழியே செல்லுவதற்கு சிரமத்தை சந்தித்து வரு கின்றனர். சாக்கடை கழிவுநீரும் பாதையில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே உடனடியாக குண்டும், குழியுமான சாலையை செப்ப னிட்டு தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.