ஆம்பூர், மே 10- ஆம்பூர் அருகே பெய்த மழை காரணமாக வாழைத் தோட்டம் நாசம், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சூறை காற்றுடன் திடீரென கன மழை பெய்தது. இதனால் ஆம்பூர் அழகே மோதக பள்ளி ஊராட்சி பகுதியில் பெய்த திடீர் மழையால் விவசா யிகள் பயிர் செய்திருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. மேலும், தென்னை, கரும்பு, வெற்றிலை, பூச்செடிகள் உள்ளிட்ட விவசாய பணப்பயிர்களும் சேத மடைந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம், ஊத்தங்கரை, பர்கூர், காண ம்பட்டி உள்ளிட்ட பல பகுதி களில் விவசாயிகள் வாழை பயிர் செய்திருந்தனர். இந்தப் பகுதியில் சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட் டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள் ளனர். மாவட்ட நிர்வாகம் சேதங் களை முறையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.