districts

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி

விழுப்புரம்,16- விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அரி கிருஷ்ணன் மகன் பாபுராஜ். இவருக்கு சென்னை பல்லா வரத்தை சேர்ந்தசக்தி வேல், பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார், பங்களாப் பேட்டை சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். அப்போது சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் தங்களுக்கு தெரிந்த சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஹரிகுமார்  ரயில்வேயில் பலருக்கும் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறி யுள்ளனர். இதை நம்பிய பாபுராஜ் அவ ருக்கும் தெரிந்த நபர்களான ராம லிங்கம், தேவி, மகாலிங்கம், சுந்தரவள்ளி ஆகியோருக்கு வேலை வாங்கித் தருமாறு சக்தி வேல், ஜெயக்குமார், சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஹரி குமாரிடம் மொத்தமாக ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் வேலையும் வாங்கிக் கொடுக்க வில்லை. பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து விழுப்பு ரம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்திலுள்ள மாவட்ட குற்றப்பிரிவில் பிரபு ராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஹரிகுமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்த னர். மற்றவர்களை தேடி வரு கின்றனர்.