districts

img

சாலையோர வியாபாரிகள் சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி சிறுகடை வியாபாரி சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 28 - சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் - 2014 குறித்து மாநகராட்சி, அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்  என்று சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 28) பாரிமுனை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சாலை யோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த கணக் கெடுப்பை விரைவாகவும், விடுபடாமலும், முறையாகவும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நகர விற்பனைக் குழுவில் 15ல் 6 பேர்  சாலையோர வியாபாரி கள் என்பதை, 3ல் 2 பங்கு என நிர்ண யிக்க  வேண்டும் என தீர்மானம்  நிறை வேற்றப்பட்டது. அடையாள அட்டை வழங்கிய பிறகே நகர விற்பனைக் குழுவிற்கான தேர்லை சட்டப்படி நேர்மையாக, ஜனநாயகப் பூர்வமாக நடத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, ஹாக்கிங் ஜோன் ஒதுக்கீட்டில் பல ஆண்டுகளாக வியா பாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுக்காமல், முன்னறிவிப் பின்றி அகற்றுவதை கைவிட வேண்டும்; விற்பனை பொருட்களை நாசப் படுத்துவதையும் நிறுத்த வேண்டும். சூறை யாடப்பட்ட பொருட்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவிற்கு கூட்டமைப்பு தலை வர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இ.எம்.முஸ்தபா வர வேற்றார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணனும், நிதி அறிக்கையை பொருளாளர் பி.மணி மாறனும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், வழக்கறிஞர் டி.நாகசைலா ஆகியோர் பேசினர். டி.ஸ்ரீகுமார் நன்றி கூறினார். கூட்டமைப்பின் தலைவராக சி.திரு வேட்டை, பொதுச் செயலாளராக எம்.வி.கிருஷ்ணன் , பொருளாளராக  பி.மணிமாறன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.