அரக்கோணம்,ஜூன் 18- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அங்கு மணல் குவாரி அமைப்பதற்கு திட்ட மிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியா பாரிகள் சனிக்கிழமை (ஜூன் 18) முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தக்கோலத்தில் மணல் குவாரி அமைத்தால், அதை சுற்றியுள்ள பகுதி களில் விவசாயிகள் பாதிக்கப்படுவர். மேலும் தக்கோலம் அதை சுற்றி யுள்ள கிராமங்களுக்கு இங்கிருந்து தான் குடிநீர் அனுப்பப்படுகிறது. அரக்கோணம் நகராட்சிக்கு இங்கிருந்துதான் குடிநீர் அனுப்புவதால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொது மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே இங்கு மணல் குவாரி அமைக்க கூடாது. மணல் குவாரி அனு மதிக்கப்பட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.