சென்னை, ஜூன் 22 - பள்ளிக்கரணை நடு நிலைப் பள்ளியை காவல் துறையினர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளனர். இதற்கெதிராக மேலாண் மைக்குழு கண்டனம் தெரி வித்து தீர்மானம் நிறை வேற்றி உயர் அலுவலர்க ளுக்கு அனுப்பி உள்ளது. பள்ளிக்கரணை புது குடியிருப்பு பகுதியில் புனித தோமையார் மலை ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 125 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் ஒருபகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாண வர்கள் விளையாடும் மைதானத்தில் செவ்வா யன்று (ஜூன் 21) ஒருபகுதி யில் தகரங்கள் அடித்து தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கட்டுமான பணியின் பாது காப்புக்கு இருந்த காவல் துறையினரிடம் கேட்டுள் ளார். உதவி ஆணையர் உள்ளிட்ட தலைமை ஆசிரியரை மிரட்டும் வகை யில் பேசியுள்ளனர். எதற்காக கட்டுமானம் நடைபெறு கிறது, யார் செய்கிறார்கள் என்ற தகவல்கூட தலைமை யாசிரியருக்கு தெரிய வில்லை. இதனையடுத்து தலைமை ஆசிரியர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மைக்குழு கூடி, இந்த ஆக்கிரமிப்புக்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. இதற்கு பிறகும், புத னன்று (ஜூன் 22) கட்டுமான பணிகளை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பள்ளி யின் வாசலை மறித்துவிட்டு, மற்றொரு தெரு வழியாக வாசல் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோ ர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.