districts

சென்னையில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்பது தொடரும் அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை, நவ.25- சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 57-க்குட்பட்ட வால்டாக்ஸ்  சாலை பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13,293 சதுர அடி பரப்பளவு கொண்ட நாடக கொட்டாய் இடத் தினை இந்து சமயம் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெள்ளிக்கிழமை (நவ.25)  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-   ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சட்டப்படி இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள சென்னை உருது நடு நிலைப்பள்ளியில் 487 மாணவ, மாணவி கள் பயில்கின்றனர். இங்கு 90 சதவீதம் அதிகமாக சிறுபான்மையின மாணவர்களே பயில்கின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருகிறது. தற்சமயம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தலைமையிலான அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெ டுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்.  மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத் தோடு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநக ராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை  பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரை வில் தொடங்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பணியாளர்களைக்கூட நிறுத்தவில்லை.  இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.