சென்னை, ஏப். 6 - மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் மீது வியாழனன்று (ஏப்.7) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத் தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறி ஞருக்கு, தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணை மார்ச் 17ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.