சென்னை, ஏப். 6 - பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவதை எதிர்த்த கூடுதல் மனுக்கள் மீது வியாழனன்று (ஏப்.6) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு கால அவகாசம் கோரிய நிலையில், கல்வியாண்டு வரை குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது. இந்நிலையில் பெத்தேல் நகர் குடியிருப்போர் சார்ப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.