சென்னை,மார்ச் 24- தண்டையார்பேட்டை யில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்ஸி ஜன் மையம் அமைக்கப் பட்டுள்ளது. பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் `ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இதனை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் திறந்து வைத்தார். துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.ஜெ. எபினேசர் துணை ஆணை யாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், மாமன்ற உறுப் பினர்கள், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ். ஹேமலதா, தண்டை யார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச காச நோய் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை வழங்கி சிறப்பாக பணி யாற்றிய மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர் களை பாராட்டி அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். காசநோய் சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகளுக்கான சிகிச்சை அளிக்க ஏதுவாக தொற்றுநோய் மருத்து வமனையில் அமைக்கப் பட்டுள்ள 34 படுக்கை வசதி களுடன் கூடிய பன் மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டினை அமைச்சர் திறந்து வைத்தார்.