சென்னை, டிச.6- ஜோர்டன் நாட்டின் காவல்துறையில் பணியாற்றும் 35 வயதான காவலர் ஒரு வருக்கு சென்னையில் அரிதிலும், அரிதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையும் செயற்கை ரத்தநாளமும் பொறுத்தப்பட்டது. மரபணு கோளாறு காரணமாக அந்த நபருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் விரை வாக உறைந்து பின்னர் உடைந்து தூளாகி அது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்ப டுத்தியது. இதனைபட்-சியாரி சிண்ட்ரோம் (பிசிஎஸ்) என்று அழைப்பர். இதனால் இதயத்தில் இருந்து கல்லீரலுக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால் நாளடைவில் கல்லீரல் அழுகியது. மேலும் இதயம் வரை ரத்த உறைவுக்கட்டிகள் செல்லும் நிலை இருப்ப தும் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாற்று கல்லீரல் பொருத்தவேண்டிய கட்டா யம் ஏற்பட்டது என்று எம்ஜிஎம் மருத்துவ மனையின் கல்லீரல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள் டாக்டர். தியாகராஜன் ஸ்ரீனிவாசன் கூறினார். இவர்களுடன் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கேஆர். பால கிருஷ்ணன், உயிர்காப்பு சிகிச்சை நிபுணர் கள் டாக்டர். தினேஷ் பாபு மற்றும் டாக்டர். நிவாஸ் ஆகியோர் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். முதலில் இதயதை சென்றடைகிற ரத்த நாளங்களில் உள்ள ரத்த உறைவுக்கட்டி களை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றபடி அந்த நபர் தயார் செய்யப்பட்டார் என்று டாக்டர். தியாகராஜன் கூறினார்.
நோயாளியின் சகோதரர் அளித்த கல்லீரலின் ஒரு பகுதி அந்த நபருக்கு பொறுத்தப் பட்டது. மேலும் இதயத்திற்கு ரத்தம் செல்லக்கூடிய ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தம் உறைந்துபோவதால் அந்த நாளம் மாற்றப்பட்டு டாக்ரான் கிராஃப்ட் என்றழைக் கப்படும், செயற்கையான ரத்த நாள குழாய் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பும் மற்றும் பின்பும், ரத்த உறையாமல் இருக்கவும் சிவப்பணுக்கள் உடையாமல் இருக்கவும் மோனோக்ளோனல் ஆண்ட்டிபாடி தெரபி என்ற சிகிச்சை பல முறைகள் இந்நோயாளிக்கு வழங்கப்பட்டது என்று கல்லீரல் உறுப்பு மாற்று துறை இயக்குனர் டாக்டர். கார்த்திக் மதிவாணன் கூறினார். சொந்தத்தில் திருமணம் செய்தால் மரபணு கோளாறு உள்ளிட்டவற்றால் ரத்தம் உறை யும் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஜோர்டன், சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இது அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.