சென்னை,ஏப்.27- சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம், செங்கல் பட்டு, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி களில் கூடுதலாக முதுநிலை (எம்எல்எம்) பட்டப்படிப்பு பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று சட்டம் மற்றும் நீதிநிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். ரகுபதி தமது துறைகளின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் பேசியது வருமாறு:- தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளை தவிர்த்து மற்றக் கல்லூரிகள் அனைத்தும் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதில் ராமநாதபுரத்தில் ரூ.77 கோடி செலவில் சொந்த கட்டடங்கள் கட்டும் பணி கள் முடிவடையும் நிலையில் உள்ளது. தேனி யில் ரூ.89 கோடி, சேலத்தில் ரூ.97 மாணவர்க ளுக்கு விடுதியுடன் சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கலில் ரூ.92 கோடியில் சொந்த கட்டட கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் செங்கற்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூடு தல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் ரூ.10 கோடியில் நடைபெற்று வரு கிறது. தமிழ்நாட்டில் புதிதாக 25 நீதி மன்றங்கள் அமைப்பதற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டடங்கள் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் இதர உட்கட்டமைப்புகளுக்கு ரூ.73 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. திருச்சியிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழத்தில் புதிய சட்ட மையம் ஒன்று நிறுவப்படும். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டறைப் பெரும்புதூர் வளாகத்தில் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.