districts

img

அரசுப் பேருந்தில் பயணம்: முதல்வர் பெருமிதம்

சென்னை, மே 7- கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2021, மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. இதனை யொட்டி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சனிக்கிழமையன்று (மே 7) காலையில் நான் ராதாகிருஷ்ணன் சாலையில் (ஆர்.கே) மாநகரப் பேருந்து தடம் எண் 29 சி அரசுப் பேருந்தில் ஏறிப் பயணித்தேன். 29 சி பேருந்தில் தான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்று வந்தேன். அதனால் அந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. பேருந்திலிருந்த மகளிரிடம் ஓராண்டு கால திமுக ஆட்சியைப் பற்றிக் கேட்டேன். ஆட்சி நடக்கும் முறை திருப்திய ளிக்கிறது என்று மகளிர் தெரிவித்தனர்.  இலவசப் பயணத்தால் தாங்கள் லாபமடைவதாகக் கூறினார்கள். இதற்கு சான்றும் உள்ளது. இந்தத் திட்டம் குறித்து சென்னையில் மூன்று வழித்தடங்களில் பய ணிக்கும் மக்கள் சிலரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அதன்படி இத்திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினப் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். அதுவும் குறிப்பாக பட்டியலினப் பெண்கள் அதிகமாகப் பயன் பெற்றுள்ளனர்.

இந்தச் சலுகை மூலமாக மாதந்தோறும் குறைந்தது ரூ.900 வரை மிச்சமாவதாக பெண்கள் பலர் கூறியுள்ளனர். இதுதான் இந்த அரசின் சாதனை.  அன்றாடச் செலவுக்கு பணம் இல்லாது இருந்த பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக மாறி யுள்ளனர். ஒரே கையெழுத்து மூலம் கோடிக்கணக்கான மகளிர் வாழ்வில் ஒளியேற்றியது தான் திராவிட மாடல் ஆட்சி. இது மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை நமது ஆட்சி செய்துள்ளது. ஓராண்டு காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்" என்றார். முன்னதாக கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிர்வாதம் பெற்றார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினை விடம் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தலைமைச் செயலகத்தில் ஓராண்டு கால சாதனையை விளக்கும் மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.