districts

img

வாடகைதாரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் தி.மலை நகர மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை,அக்.26– வாடகை வீட்டில் குடி யிருக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என, திருவண்ணாமலை நகர  சிபிஎம் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகர 7 ஆவது மாநாட்டு கொடியை கே.நீதிமாணிக்கம் ஏற்றி வைத்தார். எஸ்.இலியாஸ் சர்க்கார்  வரவேற்றார். என்.கல்யாணசுந்தரம்  அஞ்சலி தீர்மானம் வாசித்தார். செல்வி, அகமது ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி துவக்கி வைத்தார். செயலாளர் எம்.பிரகலநாதன் அறிக்கை சமர்பித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். கே.பழனி  நன்றி கூறினார்.   புதிய நகரக்குழு 9 பேர் கொண்ட நகரக்குழுவின் செயலாளராக  எம்.பிரகலநாதன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் திருவண்ணாமலை முதல் சென்னை வரை, விழுப்புரம், தாம்பரம் வழியாக இரயிலை இயக்கிட வேண்டும், தி.மலை நகருக்கு வரும் மக்களுக்கு அரசு இலவச தங்கும் விடுதி கட்டிக்கொடுக்க வேண்டும். திரு வண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.