கர்நாடக மாநிலம்,பெங்களூருவில் பெய்த கன மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவித் தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.