districts

img

குடும்ப பாதுகாப்பு நிதியை புதுச்சேரி அரசு வழங்கவேண்டும்

புதுச்சேரி, அக்.26- புதுச்சேரி மாநிலத்தில், அண்மையில் உயிரிழந்த ஆட்டோ தொழிலாளர்கள் மர்ஷல் வெனான்ஸ், துளசிங்கம், குமர வேல் ஆகியோரின் குடும்ப  பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி புதுவை மாநில ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமை யாளர்கள் சிஐடியு சங்கம் சார்பில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் மண வாளன் தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் சீனுவாசன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் விஜயகுமார், துளசிங்கம்,மது (எ) லிங்கேசன் வேலு, நூர்முகம்மது, செந்தில்குமார், பழனி பாலன், மனோகர், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில், இறந்த சங்க உறுப்பினர்களின்  குடும்ப உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கினர். அமைப்பு சாரா  நல சங்கத்தின் சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக வழங்க வேண்டிய குடும்ப பாதுகாப்பு தொகையை வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழி லாளர்களின் நல சங்கத்தை நல வாரிய மாக மாற்றிய  அரசாணையை அமல்படுத்த  வேண்டும் என்று இந்த கூட்டத்தில்  வலியுறுத்தப்பட்டது.