வந்தவாசி, அக். 26 – வந்தவாசி கோட்டை மூலையில் பயணியர் நிழற் குடை அமைக்க வேண்டும் சிபிஎம் வந்தவாசி வட்ட மாநாடு கோரிக்கை விடுத் துள்ளது. சனிக்கிழமை (அக்.26) கீழ்கொடுங்காலூர் கூட்டு சாலையில் நடைபெற்ற மாநாட்டில் கட்சிக் கொடியை வெ.குப்புசாமி ஏற்றி வைத்தார். இரா.சேட்டு வரவேற்றார். வ.அண்ணா மலை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சு.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தொடக்க உரையாற்றினார். வட்டார செயலாளர் அ.அப் துல் காதர் வேலை அறிக் கையை சமர்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.செல்வன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். வட்டக்குழு தேர்வு 8 பேர் கொண்ட வட்டக் குழுவுக்கு செயலாளராக அ.அப்துல்காதர் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் வந்தவாசியில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்து வமனைக்கு செல்வதற்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும், இலவச வீட்டு மனைக்கு விண்ணப்பித்த இஸ்லாமியர், தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்பட்டோர், மற்றும் பழங்குடி மக்கள் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், தெள்ளாறில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் பொது கழிவறை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.