districts

img

கொரோனா பாதித்தவர்களுக்கு மின் ஊழியர்கள் உணவு விநியோகம்

சென்னை, மே 23- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு), சென்னை வடக்கு கிளை  சார்பாக கடந்த 15 தேதியில் இருந்து 7-நாட்களாக தொடர்ந்து கொரணாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு மூன்று வேலை உணவு வழங்கி வருகின்றனர். மேலும் திருவொற்றியூர், எர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடி தண்ணீர், முகக்கவசம் வழங்கி வருகின்றனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), 400 துணை மின் நிலையம் மணலி நிர்வாகிகள் இந்த பணிகளை தொடர்ந்து 4ஆவது வாரமாக செய்து வருகின்றனர். இந்த பணியில் சிஐடியு நிர்வாகிகள் கே.வெங்கலையா, ஜே.ருக்மாங்கதன், ஜி.சரத்பாபு, அருள்நாதன், இயேசு மணி கே.பி.கனேஷ் பாபு ஆகியோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.