சென்னை, ஏப். 15 - ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வர்களுக்கு உதவ முடியாது என்று கூறி பெத்தேல் நகருக்கு பட்டா கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெத்தேல் நகர் குடியிருப் போர் நலச்சங்க தலைவர் அண்ணாதுரை தாக்கல் செய் துள்ள மனுவில், ஈஞ்சம்பாக் கம் பெத்தேல் நகர் பகுதியை, மேய்க்கால் நிலத்தை கிராம நத்தமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை செய்திருந் தார். இந்நிலையில் குடியிருப் புகளை காலி செய்யுமாறு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆகவே, குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், அந்த நிலத்திற்கு பட்டா கோர உரிமையில்லை. கிராம நத்தம் நிலமாக வகை மாற் றம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். பெத்தேல் நகரில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கத்தில் இருந்து அங்கு வசித்தனர். அங்கு நிலத்தை ஆக்கிரமி த்தவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர். அத்தகை யோருக்கு பட்டா வழங்கி னால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்ட தாகும் என வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், அரசின் அனுமதி இல்லா மல் ஆட்சியரால் நில வகைமாற்றம் செய்ய முடியாது. ஆகவே, ஆட்சி யரின் உத்தரவு செல்லாது. ஆக்கிரமிப்புகளை தடுக் காததால், அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது. அரசு நிலங்களை பாதுகாப் பது வருவாய் துறை அதிகாரி களின் கடமை. அதிகாரிக ளுக்கு தெரியாமல் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக் காது. ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதவாது என கூறி பட்டா கோரிய வழக்கை தள்ளுபடி செய்தனர்.