ராணிப்பேட்டை, மார்ச் 31- திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயி களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் என்.ரமேஷ் தலை மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் கே.ஜெய்சங்கர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, தலைவர் டி.சந்திரன், நிர்வாகிகள் நிலவு குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதுகுறித்து கே.பி.பெருமாள் செய்தி யாளர்களிடம் கூறுகையில், திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்திற்காக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தலையிட்டு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளிங்கர் வட்டம் பெரிய மருதாலம் விவசாயி பி.நடராஜன் விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் அறுவடைக்கு சில வாரங்களே இருந்த நிலையில் டிராக்டர் கொண்டு உழுது நெற்பயிர்களை சேதப்படுத்திய வரு வாய்த் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் பாதித்த விவசாயிக ளுக்கு உரிய நிவாரணம் வழஙக வேண்டும் என்றார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் உதவி யாளரை சந்தித்து மனு அளித்தனர். அவர் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.