சென்னை,ஜன.18- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.61,843 கோடியில், 118.9 கி.மீ. தொலை வுக்கு 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. வருகிற 2026 ஆம் ஆண்டுக் குள் பணிகளை முடித்து மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி பூந்தமல்லி-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே திறக்கப்பட உள்ளது. அதன் கட்டுமான பணிகள் வெவ் வேறு ஒப்பந்ததாரர்களால் 2 பகுதி களாக நடைபெற்று வருகிறது. 2 பூந்தமல்லி-போரூர் இடையே ஒரு பகுதியாகவும், போரூரில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை மற்றொரு பகுதி யாகவும் பணிகள் நடந்து வரு கிறது. பூந்தமல்லி-போரூர் இடையே கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் போரூர்-பவர் ஹவுஸ் இடையிலான கட்டுமான பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. மொத்தம் 407 தூண்கள் அமைக் கப்பட வேண்டும். இதுவரை 70 தூண்கள் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- போரூர்-பவர்ஹவுஸ் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் சாலையின் அகலம் குறுகலாக உள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் போக்குவரத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், மின்சார கேபிள்கள், தொலைபேசி கேபிள்கள் செல்வ தால் பணிகள் நடைபெறும் முன்பு அவை மாற்றி அமைக்க வேண்டும். மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடம், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடம் ஆகியவற்றின் இணைப்பு பகுதி ஆழ்வார் திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே அமைகிறது. எனவே இந்த பகுதியில் வலுவான அடித் தளம் அமைக்கப்பட வேண்டும். இதனால் போரூர்-பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள் ளது. ஆனாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவ தாக அதிகாரிகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.