districts

img

தீபாவளிக்கு புத்தாடை வாங்க அலைமோதிய கூட்டம்

சென்னை,அக்.15- தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகரில் சனிக்கிழமையன்று  புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அக் 24-ந்தேதி தீபாவளி என்பதால் புத்தாடைகள் வாங்க மக்கள் கடை விதிக ளுக்கு குடும்பத்தினருடன் வருகின்றனர்.  சென்னையில் முக்கிய பகுதிகளான தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை பெரம்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட அனைத்து கடை பகுதிகளில் தற்போது தீபாவளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி கடைகளில் சிறப்பு புதிய ரக டிசைன்களில் துணிகள் குவிந்து உள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி  செல்கிறார்கள். தி.நகரில் உள்ள பல நூற்றுக்கணக்கான கடைகளில் தீபாவளி விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.   சனிக்கிழமை விடுமுறையையொட்டி  காலை முதல் தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி  கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வண்ணாரப் பேட்டையில் எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடுகளில் உள்ள கடைகளிலும் தீபாவளி துணிகள் விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது. போலீசார் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி  பாதுகாப்பு பணியில் வருகிறார்கள். ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் துணிகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.