districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: கே.பி.பார்க்கில் அடிப்படை பணிகள் நிறைவு

சென்னை, ஏப். 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பையடுத்து, கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வளா கத்தில் அடிப்படை பணிகளை அரசு அதிகாரிகள் விரைந்து முடித்தனர். எழும்பூர் பகுதிக்குட்பட்ட கே.பி. பார்க் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 1000  வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி ஏப்.6 ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த  அறிவிப்பு வெளியிட்டது. இதனை யடுத்து ஞாயிறன்று (ஏப்.2) ஒவ்வொரு  வீட்டிற்கும் நேரடியாக சென்று கட்சி ஊழியர்கள் துண்டு பிரசுரத்தை கொடுத்து பிரச்சாரம் செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் ஏப்.2 அன்று மாலையே நேரடியாக வந்து, கட்சித் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சி யாக சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தா மன், ஏப்.3 அன்று கே.பி.பார்க் 8வது  பிளாக்கில் புதிய கழிவுநீர் குழாய் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்தார். மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டியை 4 வீடுகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கவும், படிக்கட்டுகள், பார்க்கிங் பகுதிகளில் மின் விளக்குகள் உடனடியாக அமைக்கவும் கண்காணிப்பு பொறி யாளருக்கு உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, குடியிருப்பு பகுதியை  முழுமையாக தூய்மை செய்தனர். அதன்பின்னர், கட்சியின் நிர்வாகி கள் இ.அன்பு, த.சித்தார்த்தன் ஆகி யோருடன் வாரிய செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி, நிறை வேற்றப்படாமல் உள்ள கோரிக்கை களை அரசு மற்றும் உயர் அதிகாரிகளு டன் பேசி குறிப்பிட்ட காலகட்டத்திற் குள் முடிப்பதாக உறுதியளித்தார்.