districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி: மீண்டும் நகரப் பேருந்து இயக்கம்

உளுந்தூர்பேட்டை, நவ. 25- உளுந்தூர்பேட்டையிலிருந்து உ.செல்லூர் கிராமத்திற்கு இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தின் விளைவாக மீண்டும் நகர பேருந்து இயக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் இருந்து உ.செல்லூர் கிராமத்திற்கு நகர பேருந்து தடம் எண் 35 இயக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நகர பேருந்தை இயக்காமல் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை நிர்வாகம் வேறு தடத்தில் மாற்றி இயக்கி வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என பணி மனை நிர்வாகத்திற்கும், மண்டல நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் மீண்டும் நகர பேருந்தை இயக்கக் கோரி சிபிஎம் சார்பில் 28ஆம் தேதி உளுந்தூர்பேட்டை பணி மனை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 27ஆம் தேதிக்குள் பேருந்து இயக்கப்படும் என எழுத்து மூலமாக உறுதிமொழி அளித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (நவ. 25) முதல் நகரப் பேருந்து இயக்கப்பட்டது. உ.செல்லூர் கிராமத்திற்கு வந்த நகரப் பேருந்தை கிராம மக்களும், சிபிஎம் தலைவர்களும் மேளதாளத்துடன் வர வேற்றனர். அங்கிருந்து உளுந்தூர் பேட்டைக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில், திமுக ஒன்றியச் செயலாளர் கே.வி.முருகன், மாவட்டக் கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் ராமலிங்கம், ஒன்றியக் கவுன்சிலர் சரண்யா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.சுரேஷ், கே.ஆனந்தராஜ், nஜ.சசிகுமார், ஏ.தங்கமணி, கிளைச் செயலாளர்கள் கே.சிவபெருமான், டி.ஆறுமுகம், கே.சக்கரவர்த்தி, எம்.வீரன், வி.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் போராட்ட அறிவிப்பின் காரணமாக மீண்டும் தங்களுக்கு பேருந்து கிடைத்ததை கிராம மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.