districts

கொரோனா விழிப்புணர்வு வாரம்

கடலூர், ஆக2- கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு  வாரத்தை கடலூர் பேருந்து நிலையத்தில்  கடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியம்  துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கொரோனாவை தவிர்ப்பது  தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்  பட்டது. தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழு வினர், நகராட்சி ஊழியர்கள், செவிலியர்கள், பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள்  உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா விழிப்பு ணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரம், முகக்கவசம்  வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்  தப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம்  அதிநவீன வீடியோ வாகனத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு தொடாபான குறும்  படங்கள் ஒளிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்டிப்பாளையத்தில்  கரோனா  தடுப்பூசி முகாம்  துவக்கி வைக்கப்பட்டது.  இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்  பாளர் சி.சக்திகணேசன்,  கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங்,  கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர்,  மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குநர் (நலப்பணிகள்) பி.என்.இரமேஷ்பாபு, துணை இயக்குநர்(சுகாதாரம்) டி.செந்தில் குமார், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி,  தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.