districts

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை ஒப்பந்தப்புள்ளி இன்று இறுதி செய்யப்படுகிறது

சென்னை. ஏப், 5- சென்னை துறைமுகம்-மதுர வாயல் உயர்மட்ட சாலைக்கான டெண்டர் வியாழனன்று  (ஏப்,6) இறுதி செய்யப்படும் என்று  சென்னை மற்றும் காமராஜர் துறை முகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தெரி வித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்திற்கு கோயம்பேடு-மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் அப்படியே பயன்படுத்தப்படும். பாலத்தின் உறுதித் தன்மையைக் கருத்தில் கொண்டு கூவம் ஆற்றின் ஓரம் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் இடிக்கப்படும் என்றார். இதில் கோயம்பேடு-துறைமுகம் இடையே மட்டும் ஈரடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது ; சென்னை துறைமுகம் 3-வதுபழமை யான பெரிய துறைமுகமாகும். வாகனங்கள், உரங்கள்,தானியங்கள், கனரக இயந்திரங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகை யாளப்பட்டு வருகின்றன.

13ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டிய  சென்னை துறைமுகம்

சென்னைத்துறைமுகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு லாபமீட்டியுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில், ரூ.150 கோடியும், காமராஜர் துறைமுகம் ரூ.700 கோடியும் லாபம் ஈட்டியுள்ளது.  இத்துறைமுகத்தில் 2022-23-ம்ஆண்டில் 48.95 மில்லியன் மெட்ரிக்டன் அளவு சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 0.8 சதவீதம் அதிகமாகும். எண்ணுர் காமராஜர் துறைமுகத்தைப் பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டில் 43.51 மில்லியன் மெட்ரிக் டன்அளவு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 43.51 சதவீதம் அதிகம் ஆகும். மேலும், காமராஜர் துறைமுகம் முதன்முறையாக 2022-23-ம்ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம், காமராஜர் துறைமுகத்துக்கு நிகர லாபமாக ரூ.669.93 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.82 சதவீதம் அதிகம் ஆகும்.

சென்னை மற்றும் காமராஜர் துறை முகங்கள் இணைந்து கடந்த2022-23-ம் ஆண்டில் 3.8 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. 2021-22-ம் ஆண்டில் சென்னை துறைமுகத்துக்கு 1,444 சரக்குக் கப்பல்கள் வருகை தந்தன. 2022-23-ம் ஆண்டில் 1,616 கப்பல்கள் வருகை தந்தன.  சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக 300 கிலோ வாட் திறன் கொண்ட ஆலை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் கப்பல் சுற்றுலாவை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் 2023-24-ம் ஆண்டில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் 100 மில்லியன் டன் அளவு சரக்கு களைக் கையாள இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது . சென்னை மப்பேடு பகுதியில் ரூ.184.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,423.5 கோடி செலவில் ஏற்றுமதி வசதி, சேமிப்பு, குளிர்பதன கிட்டங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ்' எனப்படும் பல்வகை தளவாட பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்ட மாக 64 ஏக்கரில் இதற்கான பணி கள் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட பணி 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது  சென்னை துறைமுக துணைத் தலைவர் பாலாஜி அருண்குமார் மற்றும் இரு துறை முகங்களின் அதிகாரிகள். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.