கடலூர், அக்.26- கடலூர் மாவட்ட போக்குவரத்து இடைக் கமிட்டி மாநாடு கடலூர் சி.ஜி நினைவகத்தில் நடை பெற்றது. எஸ். மணிகண்டன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் எம். முத்துக்குமரன் கொடியேற்றினார். ஏ.எஸ்.நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். செயலாளர் பி.கண்ணன் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மருதவாணன், ஜி.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் நிறைவு செய்து பேசினார். கே.சரவணன் நன்றி கூறினார். இடைக்குழு தேர்வு 9 பேர் கொண்ட போக்குவரத்து இடைக்கமிட்டியின் செயலாளராக பி. கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் தமிழக அரசு போக்குவரத்து துறை தனியார் பேருந்தை வாடகை எடுத்து பண்டிகை கால சிறப்பு இயக்கம் என்ற முடிவை கைவிட வேண்டும். நிரந்தரம் பணிக்கு வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.