செங்கல்பட்டு, மார்ச்.1- எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ‘மிலான்’என்கிற தேசிய அளவிலான 4 நாள் கலைத்திருவிழா வியாழனன்று (மார்ச்.2) துவங்குகிறது. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மிலான் என்கிற தேசிய அளவிலான கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.15 வது ஆண்டாக மிலான் கலைத்திருவிழா மார்ச் 2 தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இத் திருவிழா மாணவர்களிடயே உள்ள அறிவு திறமைகளை வெளிக்கொண்டு வருவது டன் அதனை பல்லாயிரக்கணக்கான மாணவர்களுடன்பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். எஸ்ஆர்எம் வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் கலையரங்கில் தொடங்கும் இந்த மிலான்’ கலைத் திருவிழாவை தெலுங்கு நடிகர் நானி தொடங்கி வைக்கிறார். இந்த கலைத்திருவிழாவில் தேசிய அளவில் 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இத் திருவிழாவின் லட்சினையை எஸ்ஆர்எம் துணைவேந்தர் முனைவர் முத்தமிழ்ச் செல்வன் வெளியிட்டார். பதிவாளர் சு. பொன்னுசாமி, மாணவர் விவகார அலுவலர் முனைவர் நிஷா அசோகன் மற்றும் மிலான் கலை விழா மாணவர் அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.