districts

செங்கல்பட்டு நகரில் கலை பண்பாட்டு அரங்கம் தமுஎகச மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

மதுராந்தகம். ஜூன் 27 – செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில் கலை பண்பாட்டு அரங்கம் அமைத்திட வேண்டும் என்று  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு ஜூன் 25, 26 ஆகிய இரண்டு தினங்கள் மதுராந்த்தில் தோழர் தே.லட்சுமணன் நினைவரங்கத்தில் சோபியா சங்கமித்திரா, காமராஜ், அறி வரசன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. மதுரை கதிரவன் வரவேற்றார்.  சிவா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கிவைத்து மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு பேசினார். மாவட்ட செயலாளர் இ.சங்கரதாஸ் வேலை அறிக்கையும், மாவட்டத் தலைவர் என்.டி.ஆர்.நாதன் கலை பண்பாட்டு அறிக்கையும், மாவட்ட பொருளாளர் கவிசேகர் வரவு  செலவு அறிக்கையையும் சமர்பித்த னர். மாநாட்டை வாழ்த்தி காஞ்சிபுரம்  மாவட்ட செயலாளர் கு.ஆறுமுகம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாவட்டத் தலைவர் ந.மகாலட்சுமி, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.பூங்குழலி, ஆகியோர் பேசினர். “தனித்துவம் நமது உரிமை”, என்றத் தலைப்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன், ஒன்று பட்டால்உண்டு வாழ்வு என்றதலைப்பில் பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு செய்து  மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை  பாலு பேசினார்.  மாவட்ட மாநாட்டின் கலைப் பேரணியை தொழிற்சங்கத் தலைவர் பி.மாசிலாமணி துவக்கிவைத்தார்.

மாநாட்டின் இறுதியாக மதுராந்தகம் தேரடி வீதியில் மாவட்டத் தலைவர் என்.டி.ஆர்.நாதன் தலைமையில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு  நடைபெற்றது. வரவேற்பு குழு செயலா ளர் பா.அறிவரசன் வரவேற்றார்.மதுராந்தகம் நகர்மன்றத் தலைவர் மலர்விழிகுமார் வாழ்த்துரை வழங்கி னார். “பன்மைத்துவம் நமது வலிமை”  என்றத் தலைப்பில் பர்வீன் சுல்தான் உரைவீச்சு வழங்கினார். மேலும் புதுகை  பூபாலம், புதுவை சப்தர்ஹஸ்மி கலைக்குழு, செங்கை போர்பறை கலைக்குழு , லிம்போ கேசவனின் தீ நட னம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

தீர்மானங்கள்
செங்கல்பட்டு மாவட்டத் தலை நகரில் கலை பண்பாட்டு அரங்கம் அமைத்திடவேண்டும், மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் புத்தக நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து நூலகங்களிலும் அரசு பணிக்கான போட்டித் தேர்வு நூல்களை வைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். நாட்டுப்புறகலைஞர்கள் நலவாரியத்தில் தவில், நாதஸ்வரம்  கலைஞர்களை இணைத்திட வேண்டும்.  என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்
தமுஎகச செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் இ.சங்கரதாஸ், மாவட்ட செயலாளராக கவிசேகர், பொரு ளாளராக என்.டி.ஆர்.நாதன் உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.