திருவள்ளூர், ஜூலை 2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவள்ளூர் மாவட்ட மாநாடு திருத்தணி கே.ஜி.கண்டிகையில் வெள்ளியன்று (ஜூலை 1) அன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் சி.சுரேஷ், தேசய்யா ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயலாளர் ஞானபிரசன்னா, சிஐடியு நிர்வாகி கே.எஸ்.சம்பந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.அந்தோணி வேலை அறிக்கையை வாசித்தார்.மாநில துணைத் தலைவர் சுந்தரவள்ளி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவராக இ.தனுஷ் கோடி,மாவட்ட செயலாளராக கி.பாரி, பொருளாளராக ஜெ.தேசன் உட்பட 26 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக ஜூன் 30 அன்று இரவு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.
தீர்மானங்கள்
திருத்தணி வட்டத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களில் அனைத்து பிரிவு கலைஞர்கள் ஏராளமானோர் உள்ள பகுதி என்பதால் திருத்தணியில் கலையரங்கம் அமைக்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை அலுவலகம் மற்றும் நலவாரியம் அமைக்க வேண்டும், மண்டல அளவிலான கலைபண்பாட்டுத் துறை அலுவலகம், மாவட்ட தலைநகரில் நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.