அரியலூர், மார்ச்.17- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 18 வயது வரை உடைய மாற்றுத்திறனு டைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் ராமன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவ குமார் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்ட பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் செல்வகுமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் குறிஞ்சி தேவி, வட்டார கல்வி அலுவலர்கள் மதலை ராஜ் மற்றும் ராசாமணி, பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக் குமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட மாற்றுத் திற னாளிகள் மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவர்களது நல் வாழ்வு, உதவித் தொகை குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்க ளுக்கு கண் காது மூக்கு தொண்டை மற்றும் எலும்பு முறிவு மனநல மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம் மருத்துவர்களை கொண்டு அடை யாளம் காணப்பட்டு 43 பேருக்கு புதிய அடையாள அட்டையும் உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டன.