districts

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மார்ச் 25 வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம்

தஞ்சாவூர், மார்ச் 7 - தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின், பிறப்பு முதல் 18 வயது  வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்க ளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றி யங்களில் மார்ச் 7 முதல் 25 வரை நடை பெற உள்ளது.  மார்ச் 7 திருவையாறு சீனிவாசராவ் அரசு  உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலும், மார்ச் 8 அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திலும், மார்ச் 9 மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மார்ச்  11 ஒரத்தநாடு செயின்ட் மேரிஸ் நடுநிலைப் பள்ளியிலும், (காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்), மார்ச் 10 தஞ்சாவூர்  நகரம் செயின்ட் ஆண்டனி மேல்நிலைப்பள்ளி  அன்பு இல்லத்திலும், மார்ச் 12 கும்ப கோணம் பல்நோக்கு சேவை மையம் (கே.எம்.எஸ் வளாகம்) ஆகிய இடங்களில் (காலை  9 முதல் 1 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும்) முகாம் நடை பெற உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலிக்கருவி, நடை பயிற்று வண்டி, கை, கால் செயற்கை அவ யங்களுக்கான காலிப்பர்கள், கல்வி உதவித் தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை  தேவைப்படுவோர் குறிப்பிட்ட இடங்களில்  நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் களில், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை  மற்றும் உதவி உபகரணங்கள் பெற ஆதார் அட்டை நகல்-1, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வருமானச் சான்றிதழ்-1,  ரேஷன் அட்டை நகல்-1, தலைமையாசிரி யரிடம் பெற்ற சான்று (படித்துக் கொண்டிருக் கும் மாணவர்கள்), மாற்றுத்திறனாளி தேசிய  அடையாள அட்டை புத்தக நகல்-1 இவற்று டன் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.