அரியலூர், மார்ச் 28- அரியலூர் மாவட்டம் ஆமணக்கந்கோண்டி மற்றும் புதுச்சாவடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன், மாவட்டச் செயற்குழு ஆர்.மணிவேல ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடா சலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.அம்பிகா, பி.பத்மாவதி மற்றும் ஆர். ரவீந்திரன், எ.பூபாலன், என். பசுபதி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி கட்டடம் பழுத டைந்துள்ளது இதைச் சீர்செய்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டை முறையற்ற முறையில் விவசாய நிலத் திற்கு பயன்படுத்தும் நபர் கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும். முறைகேடாக பயன்படுத்துபவர்களை தட்டிக்கேட்ட மூன்றாவது வார்டு உறுப்பினர் ரவீந்தி ரன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை காவல் துறை ரத்து செய்ய வேண்டும், ஆமணக்கந்தோண்டி ஊராட்சியில் உள்ள முதி யோர், மாற்று திறனாளி, விதவை ஆகியோர்களுக்கு அரசு உதவித் தொகை உடனே வழங்க வேண்டும், ஜே.ஜே நகரில் பொதுமக் கள் வசதிக்காக இருந்த நிழற்குடையை சாலை விரிவாக்கப் பணியின்போது இடித்து அகற்றிய கட்ட டத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும், ஆமணக்கந் தோண்டி வடக்கு தெரு விற்கு செல்லும் சாலையை யும் புதுச்சாவடி வடக்குத் தெரு, பிச்சனூர் இணைப்பு சாலையையும் சீர் செய்து தார் சாலையாக தரம் உயர்த்தி மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆமணக்கந்தோண்டி நான்கு ரோட்டில் பேரி கார்டு அமைத்து விபத்தி னால் உயிரிழப்பு ஏற்படு வதை தடுத்து நிறுத்து வேண்டுமென வலியுறுத்தி னர்.