districts

img

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு

அரியலூர், மார்ச்.3- தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் பேருந்து நிலையம் அருகில் வட்டார போக்குவரத்து துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவ சியம் குறித்த இருசக்கர வாகன விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.  பேரணியை போக்குவரத்து அலுவலர் பிரபாகர் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இந்த பேரணி தேரடி, சத்திரம், மாதா கோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையத்திற்கு வந்து நிறைவடைந்தது.  பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.