districts

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

செங்கல்பட்டு, டிச.8- வங்கக்கடலில் உருவாகியள்ள மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோரப்பகுதிகளில் வசிக்கும் 6023 குடும்பங்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 390  பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய பாது காப்பு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது, மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர்  ராகுல் நாத் தெரிவித்துள்ளார். மேலும் 12 துணை ஆட்சியர் நிலை யிலான மண்டல அலுவலர்கள் தலைமை யில் அனைத்து துறைகளையும் ஒருங்கி ணைத்து 33 குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாண்டாஸ் புயலை எதிர்கொள்ள 134 மரம் அறுக்கும் இயந்திரம், 80 ஜே.சி.பி-க்கள், 106 ெஜன ரேட்டர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை, வேளாண் துறை மற்றும் காவல்துறை, தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மாண்டாஸ் புயல் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.  அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுப்பாட்டு அறை (24×7 மணி நேரம்) தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்  தலைவர்  தெரிவித்துள்ளார். பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் தொலைபேசி 044-27427412. 044-27427414, 1077 கைபேசி – வாட்ஸ்ஆப் 9444272345  செங்கல்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மேலும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.